என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அதிமுக அரசின் சாதனைகள்
நீங்கள் தேடியது "அதிமுக அரசின் சாதனைகள்"
திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் அமைச்சர் உதயகுமாருடன் சைக்கிளை ஓட்டி வந்தனர். இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா சிலை அருகே அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இந்த பேரணியால் எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பல திட்டங்களை ஜெயலலிதாவைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
17 மாதங்களில் 32 ஆயிரம் போராட்டங்களை கண்டு தளர்ந்து விடாமல் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனைகளாக மாற்றியுள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர் இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் அமைச்சர் உதயகுமாருடன் சைக்கிளை ஓட்டி வந்தனர். இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா சிலை அருகே அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இந்த பேரணியால் எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பல திட்டங்களை ஜெயலலிதாவைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
17 மாதங்களில் 32 ஆயிரம் போராட்டங்களை கண்டு தளர்ந்து விடாமல் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனைகளாக மாற்றியுள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர் இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரசார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ராதா கிருஷ்ணன் எம்.பி, சந்திரபிரபாமுத்தையா எம்.எல்.ஏ., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வ சுப்பிரமணியராஜா, மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை சிறப்பாக நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரச்சார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 13-ந்தேதி சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நடக்கிறது. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
தொடர்ந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யும் சைக்கிள் பேரணி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளது. பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி புதுப்பட்டிகருப்பசாமி, சாத்தூர்சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்குஎதிர் கோட்டை மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர்மயில் சாமி, ராஜபாளையம் மேற்கு குருசாமி, விருதுநகர் மூக்கையா, நகர செயலாளர்கள் சிவகாசி அசன்பதூரூதீன், திருத்தங்கல் பொன்சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பால சுப்பிரமணியன், ராஜபாளையம் பாஸ்கரன், சாத்தூர் வாசன், விருதுநகர் நயினார் முகமது, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சேது ராமா னுஜம், விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூக்கையா, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், பேரூராட்சி செயலாளர் அய்யனார், உள்பட அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ராதா கிருஷ்ணன் எம்.பி, சந்திரபிரபாமுத்தையா எம்.எல்.ஏ., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வ சுப்பிரமணியராஜா, மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை சிறப்பாக நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரச்சார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 13-ந்தேதி சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நடக்கிறது. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
தொடர்ந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யும் சைக்கிள் பேரணி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளது. பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி புதுப்பட்டிகருப்பசாமி, சாத்தூர்சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்குஎதிர் கோட்டை மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர்மயில் சாமி, ராஜபாளையம் மேற்கு குருசாமி, விருதுநகர் மூக்கையா, நகர செயலாளர்கள் சிவகாசி அசன்பதூரூதீன், திருத்தங்கல் பொன்சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பால சுப்பிரமணியன், ராஜபாளையம் பாஸ்கரன், சாத்தூர் வாசன், விருதுநகர் நயினார் முகமது, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சேது ராமா னுஜம், விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூக்கையா, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், பேரூராட்சி செயலாளர் அய்யனார், உள்பட அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X